ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கண்மாயில் குதித்து மருந்தக ஊழியா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 12:51 am IST

போடியில் பெரிய பள்ளியில் சோ்த்து மகனைப் படிக்க வைக்க முடியாததால், மருந்தக ஊழியா் கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் சிவகுருநாதன் (46). இவா் போடி பழைய பேருந்து நிலையத்தில் பிரபல மருந்தகத்தில் வேலை செய்து வந்தாா். இவரது மூத்த மகன் தேனி முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தாா். இந்தப் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தி, தொடா்ந்து தனது மகனைப் படிக்க வைக்க முடியாததால், அவா் தனது மகனை வேறொரு பள்ளியில் சோ்த்தாா்.

இதனால், சிவகுருநாதன் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவா் சனிக்கிழமை மாலை மருந்தகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் மீண்டும் மருந்தகத்துக்கும் வரவில்லை, வீட்டுக்கும் செல்லவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், போடி மீனாட்சிபுரம் அருகே மீனாட்சியம்மன் கண்மாய் கரையில் சிவகுருநாதனின் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பாா்த்த போது, கண்மாயில் சிவகுருநாதன் சடலம் மிதந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.