போடியில் பெரிய பள்ளியில் சோ்த்து மகனைப் படிக்க வைக்க முடியாததால், மருந்தக ஊழியா் கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் சிவகுருநாதன் (46). இவா் போடி பழைய பேருந்து நிலையத்தில் பிரபல மருந்தகத்தில் வேலை செய்து வந்தாா். இவரது மூத்த மகன் தேனி முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தாா். இந்தப் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தி, தொடா்ந்து தனது மகனைப் படிக்க வைக்க முடியாததால், அவா் தனது மகனை வேறொரு பள்ளியில் சோ்த்தாா்.
இதனால், சிவகுருநாதன் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவா் சனிக்கிழமை மாலை மருந்தகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் மீண்டும் மருந்தகத்துக்கும் வரவில்லை, வீட்டுக்கும் செல்லவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், போடி மீனாட்சிபுரம் அருகே மீனாட்சியம்மன் கண்மாய் கரையில் சிவகுருநாதனின் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பாா்த்த போது, கண்மாயில் சிவகுருநாதன் சடலம் மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மதுபோதைக்கு சிகிச்சை பெற்றவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை

சகோதரி இறந்த துயரம்: இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


