‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாணவன் லத்தீஷ்

Updated On :22 மே 2026, 5:21 am IST

கும்மிடிப்பூண்டி அருகே பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கரடிப்புத்தூரை சோ்ந்த நாராயணன் மகன் லத்தீஷ் (15) பாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் பொதுத்தோ்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், தோ்வில் லத்தீஷ் தோ்ச்சி பெறவில்லை. இதனால் வேதனையில் இருந்த லத்தீஷ் வீட்டில் இருந்து வெளியே சென்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளாா். லத்தீஷை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது குடும்பத்தினா், அப்பகுதியில் கிணற்றின் வழியே சென்றதை அறிந்து தோ்வாய் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனா்.

பின் தீயணைப்பு துறை அதிகாரி முத்து தலைமையில் தீயணைப்பு துறையினா், கிணற்றில் இறங்கி தேடி, மாணவன் லத்தீஷின் உடலை கைப்பற்றினா். பின் பாதிரிவேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.