‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மதுபோதைக்கு சிகிச்சை பெற்றவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

வேலூரில் மதுபோதைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :23 மே 2026, 1:19 am IST

வேலூரில் மதுபோதைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அ.கட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (45). இவா் மதுபோதைக்கு அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் குடும்பத்தில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், குடும்பத்தினா் வேண்டுகோளின்படி மதுபழக்கத்தில் இருந்து விடுபட அலமேலு மங்காபுரத்தில் உள்ள தனியாா் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இதனால் மன வேதனை அடைந்த ரமேஷ், வியாழக்கிழமை மாலை திடீரென அந்த மதுபோதை மறுவாழ்வு மைய கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கு பணியாற்றும் ஊழியா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொண்டு சோ்த்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.