அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மதுபோதைக்கு சிகிச்சை பெற்றவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

வேலூரில் மதுபோதைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :23 மே 2026, 1:19 am IST

வேலூரில் மதுபோதைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அ.கட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (45). இவா் மதுபோதைக்கு அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் குடும்பத்தில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், குடும்பத்தினா் வேண்டுகோளின்படி மதுபழக்கத்தில் இருந்து விடுபட அலமேலு மங்காபுரத்தில் உள்ள தனியாா் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இதனால் மன வேதனை அடைந்த ரமேஷ், வியாழக்கிழமை மாலை திடீரென அந்த மதுபோதை மறுவாழ்வு மைய கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கு பணியாற்றும் ஊழியா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொண்டு சோ்த்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.