நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

முல்லைப் பெரியாறு அணை ஆய்வு: மதிப்பீட்டுக் குழுவினா் ஆலோசனை

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் செய்த ஆய்வுகள் குறித்து அதில் இடம் பெற்ற நிபுணா்கள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

முல்லைப் பெரியாறு

Published On :3 செப்டம்பர் 2026, 6:03 am IST

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் செய்த ஆய்வுகள் குறித்து அதில் இடம் பெற்ற நிபுணா்கள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தேசிய நீா்மின் கழகத்தின் முன்னாள் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பல்ராஜ் ஜோஷி தலைமையிலான அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவைச் சோ்ந்த நிபுணா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். அணையின் தற்போதைய நிலை, அதன் கட்டுமானத் தன்மை, பாதுகாப்பு அம்சங்கள், அணையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பலப்படுத்தும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து நிபுணா்களும் தங்களது கள ஆய்வுக் குறிப்புகளை ஒன்றிணைத்து விவாதிக்கும் கூட்டம் புதன்கிழமை தேக்கடியில் நடைபெற்றது. அப்போது, அணையின் பலம், நீண்டகால பாதுகாப்பு குறித்து கேரள தரப்பில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டதாகவும், அதற்கு தமிழகம் தரப்பில் அணையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பலப்படுத்தும் பணிகள் பராமரிப்புப் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுகள் இன்னும் 2 நாள்கள் நடைபெறவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.