அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வறட்சி நிவாரணப் பணிகள் செய்ய தீர்மானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியையொட்டி, கிராமங்களில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்கான

News image
Updated On :17 ஜனவரி 2013, 12:40 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியையொட்டி, கிராமங்களில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்கான ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தலைவர் கே.காளிமுத்து பேசுகையில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மழையின்றி மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக ஒன்றியத்தில் 137 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டது. மேலும் பொது நிதியில் இருந்து 40 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டது.

தற்போது வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசிற்கு கருத்துரு மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பப்படவுள்ளது. ஒன்றியத்தில் உள்ள 15 வார்களில் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், தேவையுள்ள இடத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என மன்றம் ஒரு மனதாக முடிவு செய்துள்ளது என்றார். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.