விருதுநகர், ராமச்சந்திரன் தெருவில் உள்ள நகராட்சி பூங்கா பாரமரிப்பில்லாததால், சிதிலமடைந்து காட்சிப் பொருளாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சி 9-ஆவது வார்டுக்கு உள்பட்ட ராமச்சந்திரன் தெருவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2009-2010-இல் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டது.
அதில் செயற்கை நீரூற்று, நடைபாதை, பூச்செடிகள், சிறுவர், சிறுமிகளுக்கான சறுக்கு மற்றும் ஏற்ற, இறக்கம் முதலானவை அமைக்கப்பட்டன. மேலும், சுற்றுச் சுவர் உள்ள பகுதிகளில் வண்ண ஓவியங்களும் வரையப்பட்டன.
பூங்கா பணிகள் நிறைவடைந்தும் உடனடியாக திறக்கப்படவில்லை. பின்னர், பொதுமக்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பூங்கா பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. ஆனால், பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று செயல்படவில்லை. மேலும், ஓவியங்கள் வண்ணமிழந்து விட்டன. அதேபோல், பராமரிப்பு இல்லாததால் பூங்காவின் உள் பகுதியில் முள்செடிகளும் வளர்ந்தன.
இதனால், பூங்காவுக்கு சிறுவர், சிறுமியர், பொது மக்கள் வருகை முற்றிலும் குறைந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, விருதுநகரில் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பலர் குழந்தைகளுடன் மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் கூடுதல் பணம் செலவு, கால விரயம் ஏற்படுகிறது.
எனவே, விருதுநகர் ராமச்சந்திரன் தெருவில் உள்ள பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வு! ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்

பெனால்டியில் கோல் அடித்த மெஸ்ஸி: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


