டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

திருச்சுழி வட்டம், சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு, நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:30 am IST

திருச்சுழி வட்டம், சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு, நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
 சித்தலக்குண்டு கிராமத்தில் பிரதான வீதியில் தார்ச்சாலை அமைத்து பல ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்நிலையில், உரிய பராமரிப்பில்லாததால், இந்த சாலை சேதமடைந்து, தற்போது, மண் சாலையாக மாறி விட்டது. 
 இந்த வீதியின் இருமருங்கிலும் இருந்த கழிவுநீர்க் கால்வாய்களும் முற்றிலும் சேதமடைந்து, மண் மூடி விட்டது. இந்நிலையில் இத்தெருவில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வீதியில் சிறுகுட்டைபோல் தேங்கி, பின்னர் அது நிரம்பி அருகிலுள்ள மழைநீர் ஓடைக்குச் செல்கிறது.
 இதுபோன்று, தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், நோய்த்தொற்று ஏற்பட்டு இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி வாந்தி, பேதி, சளி, இருமல் ஆகிய உபாதைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 
 இதுதொடர்பாக ம.ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத்திலும், சித்தலக்குண்டு ஊராட்சியிலும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கழிவுநீர்க் கால்வாய் அமைக்கவும், பிரதான வீதியில் தார்ச் சாலை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.