
குடிபோதையில் தகராறு: இளைஞரை தாக்கியவர் கைது
பரளச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பரளச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பரளச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கணேசன்(35). இவர் புதன்கிழமை இரவு தன்னுடைய உறவினரான மணிகண்டனுடன்(38) மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை கணேசன் தாக்கினராம். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் திருச்சுழி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் பரளச்சி போலீஸார் வழக்குப்பதிந்து கணேசனை வியாழக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






