ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரக் கேடு

சாத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சாத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் பஞ்சாயத்திற்குள்பட்ட, சிவகாசி செல்லும் சாலையின் ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.
 சிவகாசி மற்றும் அவ்வழியாக செல்லும் கிராமத்தினர் பேருந்து, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சாத்தூரிலிருந்து இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.  
எனவே இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இவ்வழியாகச் செல்லும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். 
மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாகவும் அப்பகுதியினர் கடும் சுவாச பிரச்னைகளுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. மேலும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
எனவே இப்பகுதியில் சாலையின் ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.