டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர்

ராஜபாளையம் வழியாக சபரி மலைக்கு நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும்

Updated On :25 டிசம்பர் 2018, 6:38 am IST

ராஜபாளையம் வழியாக சபரி மலைக்கு நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் கார், வேன், பேருந்து மூலம் திருமங்கலம்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் வழியே தென்காசி, ஆரியங்காவு, புனலூர், கோட்டயம், பம்பை வழியாக சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிலர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரவு நேரங்களில் செல்வது வழக்கமாகி விட்டது. நள்ளிரவில் தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நள்ளிரவில் சபரிமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இலவச தேநீர் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். இதில் டி.எஸ்.பிக்கள் ராஜா, ரவிச்சந்திரன், வட்டார  போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேநீர் வழங்கும் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இவ்வழியாக சபரிமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.