8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இளைஞருக்கு கத்திக் குத்து:  தம்பதி மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை  இளைஞரை கத்தியால் குத்தியதாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை  இளைஞரை கத்தியால் குத்தியதாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
டி.மானகேசரி, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுப்புராஜ் (20). இவரும் இதே இடத்தைச் சேர்ந்த அ.குமார்-துரைச்செல்வி தம்பதியினரின் மகள் ராமலட்சுமியும் நட்பாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.  இதனை ராமலட்சுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த சுப்புராஜை, ராமலட்சுமியின் பெற்றோர் வழிமறித்து கத்தியால் குத்தி, கம்பால் அடித்து காயப்படுத்தினராம்.
இதில் காயமடைந்த சுப்புராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இது குறித்த புகாரின் பேரில் குமார், துரைச்செல்வி மீது  மல்லி போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.