சிவகாசியில் செவ்வாய்க்கிழமை பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி தெய்வானை நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமா (40). இவர் தனது வீட்டருகே நடந்து சென்றபோது, பின்புறமாக வந்த ஒருவர் , ஹேமாவை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம். இதையடுத்து அவர் கூச்சலிட்டதால், அக்கம்பக்கம் உள்ளவர்கள் அந்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், அய்யனார் காலனியைச் சேர்ந்த செல்வராஜன் மகன் மணிகண்டன் (22) என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


