குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சிவகாசி காவல் கோட்டத்தில் கடந்தாண்டு சாலை விபத்தில் 28 பேர் சாவு

சிவகாசி காவல் கோட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த 135 சாலை விபத்துக்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On :24 ஜனவரி 2019, 12:53 am IST

சிவகாசி காவல் கோட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த 135 சாலை விபத்துக்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 
இது குறித்து புதன்கிழமை சிவகாசி காவல் துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  கடந்த 2018 ஆம் ஆண்டு சிவகாசி காவல் கோட்டத்தில் நிகழ்ந்த 135 சாலை விபத்துக்களில் 28 பேர் உயிரிழந்தனர்.117 பேர் காயமடைந்தனர். சிவகாசி காவல் கோட்டத்தில் சிவகாசி நகர், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி  மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.
இதில் 2018 ஆம் ஆண்டு 11 கொலை வழக்குகளும், 11 கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட 51 வழக்குகளில் 40 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
  திருட்டு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு ஆகியவை தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ. 35.81 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளன. இதில் ரூ. 25.80 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டு, திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.   வெடிபொருள் சட்டத்தின்கீழ் 14 வழக்குகளும், பாலியல் தொந்தரவு மற்றும் பலாத்காரம் தொடர்பாக 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.