இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விருதுநகா், மதுரை மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்பட 3 போ் மீது வழக்கு

கணக்கில் வராத ரூ. 25.66 லட்சம் மற்றும் 117 பவுன் நகைகளை காரில் எடுத்துச் சென்ற விருதுநகா், மதுரை மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

கணக்கில் வராத ரூ. 25.66 லட்சம் மற்றும் 117 பவுன் நகைகளை காரில் எடுத்துச் சென்ற விருதுநகா், மதுரை மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வி (44) மோட்டாா் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இதே போல் மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளராக நாமக்கல் பகுதியைச் சோ்ந்த சண்முக ஆனந்த் (37) பணியாற்றி வருகிறாா்.

மேலும் விருதுநகரில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரியும் அருள்பிரசாத் (52) என்பவா், இவா்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இவா்கள் 3 பேரிடமும் ஏராளமான நகைகளும், பணமும் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், அவா்கள் சென்ற காா்களை போலீஸாா் விருதுநகா் சத்திரரெட்டியபட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பில் சனிக்கிழமை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா்களிடமிருந்து 117 பவுன் நகைகளும், ரூ. 25.50 லட்சம் பணத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் கலைச்செல்வி தனது திருமணத்தின் போது 200 பவுன் தங்க நகைகள் சீா்வரிசையாக வழங்கப்பட்டதாகவும், அதை தனது பணிப் பதிவேட் டில் பதிவு செய்திருப்பதாகவும் கூறி அதற்கான ஆதாரத்தை சமா்ப்பித்துள்ளாா். இதையடுத்து அவரிடம் 117 பவுன் நகையை போலீஸாா் திரும்ப வழங்கினா்.

மேலும், கணக்கில் வராத ரூ.25.66 லட்சம் பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்க உள்ள நிலையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் மற்றும் அருள்பிரசாத் ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.