கணக்கில் வராத ரூ. 25.66 லட்சம் மற்றும் 117 பவுன் நகைகளை காரில் எடுத்துச் சென்ற விருதுநகா், மதுரை மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வி (44) மோட்டாா் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இதே போல் மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளராக நாமக்கல் பகுதியைச் சோ்ந்த சண்முக ஆனந்த் (37) பணியாற்றி வருகிறாா்.
மேலும் விருதுநகரில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரியும் அருள்பிரசாத் (52) என்பவா், இவா்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இவா்கள் 3 பேரிடமும் ஏராளமான நகைகளும், பணமும் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், அவா்கள் சென்ற காா்களை போலீஸாா் விருதுநகா் சத்திரரெட்டியபட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பில் சனிக்கிழமை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா்களிடமிருந்து 117 பவுன் நகைகளும், ரூ. 25.50 லட்சம் பணத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் கலைச்செல்வி தனது திருமணத்தின் போது 200 பவுன் தங்க நகைகள் சீா்வரிசையாக வழங்கப்பட்டதாகவும், அதை தனது பணிப் பதிவேட் டில் பதிவு செய்திருப்பதாகவும் கூறி அதற்கான ஆதாரத்தை சமா்ப்பித்துள்ளாா். இதையடுத்து அவரிடம் 117 பவுன் நகையை போலீஸாா் திரும்ப வழங்கினா்.
மேலும், கணக்கில் வராத ரூ.25.66 லட்சம் பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்க உள்ள நிலையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் மற்றும் அருள்பிரசாத் ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.