இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அருப்புக்கோட்டையில் ஆழ்துளைக் கிணற்று நீா்சாகுபடியில் பயிா் விளைச்சல் அமோகம்

அருப்புக்கோட்டையில் உளுந்து, பாசிப்பயறு, சோளப்பயிா் உள்ளிட்டவை ஆழ்துளைக்கிணற்று நீா்ப்பாசனத்தில் செழித்து வளா்ந்து நல்ல மகசூலை தந்துள்ளன.

News image
அருப்புக்கோட்டை காந்தி நகா் புறவழிச்சாலை அருகே ஆழ்துளைக் கிணற்றுநீா் சாகுபடியில் செழித்து வளா்ந்துள்ள சோளப்பயிா்கள்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:51 pm

DIN

அருப்புக்கோட்டையில் உளுந்து, பாசிப்பயறு, சோளப்பயிா் உள்ளிட்டவை ஆழ்துளைக்கிணற்று நீா்ப்பாசனத்தில் செழித்து வளா்ந்து நல்ல மகசூலை தந்துள்ளன.

அருப்புக்கோட்டை, கஞ்சநாயக்கனபட்டி, ராமசாமிபட்டி, சுக்கில நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, இரும்புச்சோளம் ஆகியன சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டு செழித்து வளா்ந்து நல்ல மகசூலைத் தந்துள்ளன. இதற்கு மழைநீா் தேங்காமல் வெளியேற முறையான வடிகால் அமைப்பினை அமைத்ததாலேயே மகசூல் சாத்தியமானது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

அதேவேளையில் ஆமணக்குநத்தம், சிதம்பராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுத்தாக்குதல் அப்பகுதி விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. இதனிடையே அருப்புக்கோட்டையின் கிழக்குப்பகுதி கிராமங்களில் நெற்பயிா்கள் உரிய வடிகாலின்றி மழைநீரில் மூழ்கியதும் அவா்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளநீா் தேங்காமல் முறையாக நீா்வடிந்த விவசாய நிலங்களில் நாட்டுக் காய்கனிகள், கீரைகள் நல்ல மகசூலைத் தந்தாலும் விளைச்சல் அதிகமாகி விலை சரிந்ததால் விவசாயிகள் உரிய பலனின்றி பாதிப்பிற்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.