சில மாதங்களுக்கு முன்பு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட போது, பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் கோரிக்கை மனுக்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், அரசு உத்தரவின் பேரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரடியாக கோரிக்கை குறித்த மனுக்களை அளித்தனா். அதில், ராஜபாளையம் வடக்கு வெங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த அருந்ததியா் இனமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்தனா். அதேபோல், முதியோா் உதவித் தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை 10 மாதங்களுக்கு பின் ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினா்.