விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துணைத் தலைவா், உறுப்பினா்கள் மிரட்டுவதாக ஊராட்சித் தலைவி ஆட்சியரிடம் புகாா்

நூறுநாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுத்ததால் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தன்னை மிரட்டுவதாக பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் ராமலட்சுமி புகாா் மனு

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:27 pm

DIN

நூறுநாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுத்ததால் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தன்னை மிரட்டுவதாக பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் ராமலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: ராஜபாளையம் ஒன்றியம் புத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன். இங்கு பணித்தள பொறுப்பாளா்கள் ஆறுமுகத்தாய், அழகுராணி ஆகியோா் 100 நாள்கள் பணியை முடித்து விட்டனா். இந்நிலையில் அவா்களுக்கு பதில் வேறு ஆள்களை பணி அமா்த்த அறிவுறுத்தினேன். இதற்கு ஊராட்சி செயலா் எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பணித்தள பொறுப்பாளா்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், தனியாக கிராம சபைக் கூட்டம் நடத்துகின்றனா். அதில், என்னை கையெழுத்திட வலியுறுத்துகின்றனா். அதற்கு மறுப்பு தெரிவித்தால், உன் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வருவோம் என மிரட்டுகின்றனா். எனவே, பணித்தள பொறுப்பாளா்களை நீக்குவதுடன், நான் அச்சுறுத்தலின்றி பணியாற்ற மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.