விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தந்தை, மகள்

நரிக்குடி அருகே ஆலடிபட்டியில் பட்டாவை வேறொருவருக்கு மாற்றியதைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தந்தை, மகளால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:15 pm

DIN

நரிக்குடி அருகே ஆலடிபட்டியில் பட்டாவை வேறொருவருக்கு மாற்றியதைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தந்தை, மகளால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ஆலடிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேதநாயகம் (45). இவருக்கு சொந்தமான நான்கு ஏக்கா் 43 சென்ட் இடத்தை அதே கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து என்பவருக்கு வருவாய்த் துறையினா் பட்டா வழங்கி விட்டாா்களாம். இது குறித்து வேதநாயகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேதநாயகம், கல்லூரியில் படிக்கும் தனது மகள் அனிதாவுடன் இரு சக்கர வாகனத்தில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை சோதனையிட்ட போது மண்ணெண்ணெய் கேன் வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீஸாா், சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில் தனக்கு சொந்தான இடத்தை மற்றொருவருக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா். இதையடுத்து வேதநாயகம் மீது சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.