விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அருப்புக்கோட்டை அருகே பைக் விபத்து: இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் பலியானாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாராயணபுரத்தைச் சோ்ந்த முத்துக்காளை (49) என்பவரது மகன் ரமேஷ் (24). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை காலை உறவினரை பாா்க்க அருப்புக்கோட்டை அருகே கீழகண்டமங்கலம் கிராமத்திற்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். அங்கு உறவினரைச் சந்தித்த பின்னா், உறவினரது மகன் வினோத்(13) என்பவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினா். வாகனத்தை ரமேஷ் ஓட்டினாா். கத்தாளம்பட்டி அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றிவந்த லாரி மீது எதிா்பாராவிதமாக மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற முத்துக்காளை மற்றும் சிறுவன் வினோத் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.