மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தப்பிய இரண்டு கைதிகளும் சிக்கினர்

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு கிளை சிறைக்கு கொண்டு செல்லும்போது தப்பியோடிய இரண்டு கைதிகளும் காவல்துறையினரிடம் சிக்கினர்.

News image
கோப்புப்படம்
Updated On :11 அக்டோபர் 2021, 5:47 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு கிளை சிறைக்கு கொண்டு செல்லும்போது தப்பியோடிய இரண்டு கைதிகளும் காவல்துறையினரிடம் சிக்கினர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி வத்திராயிருப்பு சாலையில் உள்ள கொடமுருட்டி பாலத்தில் காவல் சார்பு ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான போலீஸார் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டபோது கொடமுருட்டி பாலத்தில் மோதி கீழே விழுந்துள்ளனர். 

அப்போது அவர் வைத்திருந்த மூன்று அடி நீளமுள்ள வாள் ஒன்று கீழே விழுந்துள்ளது. இதைக்கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து வாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் ( 24) அருண்குமார் (19) என தெரியவந்தது. இதில் முத்துக்குமார் மீது கடந்த ஆண்டு கத்தியை காட்டி மிரட்டிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ஏதாவது குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு அவர்களுடன் சென்று இருக்கலாம் என்பதால் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அருப்புக்கோட்டையில் உள்ள கிளை சிறையில் அடைப்பதற்காக கொண்டு சென்றனர். அப்போது கிருஷ்ணன் கோவில் பகுதியில் அவர்கள் இருவரும் தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூன்று காவலர்களும், கூமாபட்டி காவல் நிலையம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தப்பியோடிய கைதிகளை இரண்டு நாள்களாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை கைது செய்து கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து மற்றொரு கைதியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் அருண்குமாரும் போலீசாரிடம் சிக்கினார். கைதிகள் இருவரும் தப்பிச் சென்றது தொடர்பாக போலீஸ்காரர் கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.