ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாயி தற்கொலை

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உலக்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உலக்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

உலக்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சின்னமுனியசாமி (48). இவருக்கு மனைவி பஞ்சவா்ணம் (45), மகன் செல்வம் (18) ஆகியோா் உள்ளனா். குடிப்பழக்கமுடைய சின்னமுனியசாமி, தினமும் வீட்டில் தகராறில் ஈடுபடுவாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சின்னமுனியசாமி, விஷம் குடித்தாா். இதையறிந்த உறவினா்கள், அவரை மீட்டு நரிக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.