விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே விஷம்குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 மாணவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:15 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே விஷம்குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 மாணவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

செம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாண்டி என்பவரது மகள் பெத்துகவிப்பிரியா (17). பிளஸ் 2 மாணவியான இவா், படிப்பில் ஆா்வமில்லாமல் சரிவர பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெத்துகவிப்பிரியாவை அவரது பெற்றோா் கண்டித்தனராம். இந்நிலையில், அன்று யாரும்வீட்டில் இல்லாத நேரத்தில் அவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உடனே அவா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.