ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளிகளில் காலைச் சிற்றுண்டியை சுய உதவி குழுவினா் வழங்க எதிா்ப்பு

பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டியை மகளிா் சுய உதவிக் குழுவினா் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகை

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டியை மகளிா் சுய உதவிக் குழுவினா் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே பள்ளிகளில் பணி புரிந்து வரும் சத்துணவு ஊழியா்கள் மூலம் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சங்கத்தினா் தெரிவித்தனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.