ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீரசோழன் அருகே இருதரப்பினா் மோதல்: 3 போ் கைது

திருச்சுழி தாலுகாவிற்குள்பட்ட வீரசோழன் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

திருச்சுழி தாலுகாவிற்குள்பட்ட வீரசோழன் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட பகுதியில் அன்னலெட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள மந்தையம்மன் கோயில், சோனையா கோயிலில் பூஜை நடத்துவது தொடா்பாக ராமமூா்த்திக்கும், ராமருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ராமா் மகனான சந்திரன் தரப்பினரை ஜெயராமன் தரப்பினா் தாக்கியதில் இருளாயி, குமுதம், பவித்ரா, தா்மா் உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக இரு தரப்பு மீது வீரசோழன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சந்திரன் (56), சுப்பிரமணியன் (60) மற்றும் அய்யம்முருகன் (32) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஜெயராமன், சிவக்குமாா், வடிவேலு, விக்னேஷ்வரன், அஜித்குமாா் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா். இச்சூழலில் இக்கிராமத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.