ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலமாக மீட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது திருமுக்குளம். இது ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான இந்த குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு பெண்களின் உடல்கள் மிதப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உடலை மீட்டனர்.
பின்னர் உடலை மீட்டு படிக்கட்டில் வைத்து பார்த்த போது சுமார் 35 வயது உடைய இளம் பெண்ணும், சுமார் 12 வயது சிறுமியின் உடலும் தெரியவந்தது. இது பற்றி தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் விரைந்து வந்து இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: என்ன சொல்வதென்று தெரியவில்லை: பில்கிஸ் பானுவின் கணவர் கருத்து
மேலும் இறந்தவர்கள் தாய்-மகளா, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், குளிக்க வரும் போது தவறி விழுந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

மீனாட்சி அபாரம்: காலிறுதிக்கு தகுதி
ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டுவீச்சு: 3 போ் கைது

ஸ்ரீபால் முனீஸ்வரா், ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



