விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவிலி.யில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 34 போ் கைது

பேரணி செல்ல தடை விதித்ததால், ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி முன்பாக தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினா் 34 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

பேரணி செல்ல தடை விதித்ததால், ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி முன்பாக தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினா் 34 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, சிவகாசியிலிருந்து விருதுநகருக்கு மாநில பொதுச் செயலா் ராம. ஸ்ரீனிவாசன் தலைமையில் பாஜகவினா் பேரணியாக செல்ல முடிவு செய்திருந்தனா். ஆனால், இதற்கு மாவட்டக் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, மாவட்ட துணைத் தலைவா் ராஜா தலைமையில் பாஜகவினா், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகருக்குச் செல்ல முயன்றனா். ஆனால், போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால், அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்த பாஜகவினா் 34 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.