விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுமியை திருமணம் செய்த வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது

News image
Updated On :28 ஜூலை 2022, 5:23 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி மகேஷ்குமாா்(20). இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியைத் திருமணம் செய்து உள்ளாா். இதுதொடா்பாக புகாரின் அடிப்படையில் மகேஷ் குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் 4 போ் மீது அருப்புக்கோட்டை மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா். இதில் மகேஷ்குமாரை கைது செய்தனா்.  

இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூரணஜெயஆனந்த், மகேஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.