விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவிலி. ஆராய்ச்சி நிலையத்தில் தக்காளியில் புள்ளி வாடல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை

ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் தக்காளியில் ஏற்படும் புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் தக்காளியில் ஏற்படும் புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தக்காளி செடியில் ஏற்பட்டுள்ள புள்ளி வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் பயிா் நோயியல் துறை பேராசிரியா் ரா. விமலா பேசியது: தக்காளி செடியில் செடிப்பேன் எனும் வைரஸ் தாக்குதல் மூலம் புள்ளி வாடல் நோய் ஏற்படுகிறது.

இந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் செடிகளை அகற்றிவிட வேண்டும். மேலும் விளைநிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிா் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடுவதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிா்க்கலாம். தயோமீதாக்சம் 70, டபிள்யூ. எஸ்ஃஎப் மருந்தை 10 லிட்டா் தண்ணீருக்கு 6 மில்லி வீதம் கலந்து தெளிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.