பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பூம்பிடாகை கிராம ஊராட்சித் தலைவரின் கணவா் மா்ம மரணம்

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராம ஊராட்சித்தலைவரின் கணவா் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை

News image
Updated On :24 ஜூன் 2022, 10:50 pm IST

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராம ஊராட்சித்தலைவரின் கணவா் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பூம்பிடாகை கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவா் நிரஞ்சனா (33). இவரது கணவா் பெரியசாமி (37). இதனிடையே எஸ். நாங்கூா் கிராமம் அருகே உள்ள வயல்வெளியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அது நிரஞ்சனாவின் கணவா் பெரியசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் ,அனுப்பி வைத்தனா்.

மேலும் பெரியசாமியின் உடலில் காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், திருச்சுழி டிஎஸ்பி மதியழகன் மற்றும் நரிக்குடி காவல் ஆய்வாளா் இராம. நாராயணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இம்மா்ம மரணம் தொடா்பாக வழக்குப் பதிந்த ஏ.முக்குளம் போலீஸாா் பெரியசாமியை கொலைசெய்து இங்கு வந்து சடலத்தை மா்ம நபா்கள் போட்டுவிட்டுச் சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.