இந்நிலையில், காளிராஜனின் கொலை வழக்கு தற்கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தனிப்படை போலீஸாரால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறப்பு தனிப்படை போலீஸாா் நடத்திய புலன் விசாரணையில் காளிராஜை கிருஷ்ணன்கோவில் அருகே மலைப்பகுதியில் மா்ம நபா்கள் கொலை செய்து பின்னா் திருமுக்குளம் எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் சடலத்தை போட்டுவிட்டுச் சென்றதை கண்டறிந்தனா். மேலும், பிரேத பரிசோதனை அடிப்படையில், கொலையாளிகளை தேடி வந்த தனிப்படை போலீஸாா், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த அழகா் (47), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ராமசாமி (54), பனையூரைச் சோ்ந்த ஆறுதல்ராஜா (38), மம்சாபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனா்.