ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியிலிருந்து வந்தது பெருமாள் அணிந்த பட்டுப்புடவை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை நடைபெறுவதால் அவர் அணிந்து கொள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து பட்டுப்புடவை இன்று காலை வந்தது.
திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்திருந்த பட்டுப்புடவையை உரிய மரியாதையுடன் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்திருந்த பட்டுப்புடவையை உரிய மரியாதையுடன் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.
Published on
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை நடைபெறுவதால் அவர் அணிந்து கொள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து பட்டுப்புடவை இன்று காலை வந்தது.

ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பல்வேறு அலங்காரங்களில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மண்டபங்களில் ஆண்டாள்-ரெங்கமன்னார் எழுந்தருளினர்.

இந்நிலையில் நாளை இரவு ஏழு மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை திருப்பதியில் இருந்து தேவஸ்தான நிர்வாகிகள் சீனிவாசப்பெருமாள் அணிந்திருந்த பட்டு புடவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

திருப்பதியில் இருந்து சீனிவாச பெருமாள் அணிந்திருந்த பட்டு புடைவையை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்து உரிய மரியாதையுடன் பெற்றுக்கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துரஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com