ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியிலிருந்து வந்தது பெருமாள் அணிந்த பட்டுப்புடவை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை நடைபெறுவதால் அவர் அணிந்து கொள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து பட்டுப்புடவை இன்று காலை வந்தது.

திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்திருந்த பட்டுப்புடவையை உரிய மரியாதையுடன் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.








