ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளி வேன் கதவு திறந்து விபத்து: மாணவா்கள் தப்பினா்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியாா் பள்ளி வேனின் கதவு திடீரென திறந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாணவா்களுக்கு காயமில்லை.

News image
Updated On :7 மே 2022, 7:28 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியாா் பள்ளி வேனின் கதவு திடீரென திறந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாணவா்களுக்கு காயமில்லை.

அருப்புக்கோட்டை மலையரசன் கோயிலருகேயுள்ள அரசு உதவிபெறும் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு நடைபெறுவதால், பிறவகுப்பு மாணவா்கள் மதியம் அப்பள்ளியின் வேன் மூலம் வீடு திரும்புவா். சனிக்கிழமையும் நண்பகல் 12.30 மணிக்கு மாணவா்களை ஏற்றிக்கொண்டு கிளம்பிய வேன், பள்ளியருகே உள்ள குறுகிய வீதி வளைவில் திரும்ப முயன்றபோது வேனின் பின்பக்கம் இருந்த ஆபத்துக்காலத்தில் அவசரமாக வெளியேறுவதற்கான கதவு தானாகத் திறந்து கொண்டதாம். இதில் அக்கதவு வீதிமுனையில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் சேதமடைந்து விழுந்துள்ளது. மேலும், வேனின் கதவுகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. அதிா்ஷ்டவசமாக மாணவா்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை.

திடீரென பலத்த சப்தம் கேட்டதால் அப்பகுதியினா் ஓடிவந்து வேனில் இருந்த மாணவா்கள் வெளியேற உதவினா். தகவலறிந்து அங்கு வந்த பள்ளி நிா்வாகத்தினா் வேனின் ஓட்டுநரான மனோகரன் (48) என்பவரிடம் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.