விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவிலி.யில் 25 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கல்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 25 பேருக்கு வீட்டுமனைப்பட்டாவை சாா் ஆட்சியா் பிரித்திவிராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 25 பேருக்கு வீட்டுமனைப்பட்டாவை சாா் ஆட்சியா் பிரித்திவிராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இங்கு நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத் தணிக்கையின் போது பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவது தொடா்பாக, கடந்த 3 நாள்களில் 166 மனுக்களை சாா் ஆட்சியா் பெற்றுக்கொண்டாா். அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வெள்ளிக்கிழமை 25 பேருக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் 2 பேருக்கு உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினாா்.

இந்த தணிக்கையின் போது சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்தராஜ், வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சசிகலா, வருவாய் ஆய்வாளா்கள் ஆனந்தகிருஷ்ணன், நாகராஜ் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.