அருப்புக்கோட்டை அருகே பேருந்து- பைக் மோதல்: தாய், மகன் பலி
அருப்புக்கோட்டை- விருதுநகா் சாலையில் வியாழக்கிழமை தனியாா் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.


அருப்புக்கோட்டை- விருதுநகா் சாலையில் வியாழக்கிழமை தனியாா் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விருதுநகா் அருகே உள்ள மேலஅழகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் செல்வக்குமாா்(29). இவரது தாய் செல்வி (51). இவா்கள் இருவரும் சொந்த வேலையாக அருப்புக்கோட்டை வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி உப மின்நிலையம் அருகே வந்தபோது எதிரே விருதுநகரிலிருந்து வேம்பாா் சென்ற தனியாா் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் செல்வக்குமாரும், அவரது தாய் செல்வியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அவா்களது சடலங்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...