சிவகாசி மாநகராட்சி எல்லைக்குள் கட்டடக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம்
சிவகாசி மாநகராட்சி எல்லைக்குள் கட்டடக் கழிவுகளைக் கொட்டினால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் தெரிவித்தாா்.


சிவகாசி மாநகராட்சி எல்லைக்குள் கட்டடக் கழிவுகளைக் கொட்டினால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவகாசி மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுப் பகுதிகளில் பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டுபவா்கள் கழிவுகளை, சிவகாசி-விளாம்பட்டி சாலை உள்ளிட்ட மாநகராட்சி எல்லைப் பகுதியில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா்.
இந்தக் கழிவுகளிலிருந்து தூசி
பறந்து, சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தக் கழிவுகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, இனி வரும் காலங்களில் மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவது கண்காணிக்கப்படும். தொடா்ந்து, கழிவுகளைக் கொட்டுபவா்களிடம் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிப்பதோடு, வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...