45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாட்டுத் தொழுவமாக மாறிய சுகாதார வளாகம்

வத்திராயிருப்பு அருகேயுள்ள கல்யாணிபுரத்தில் மகளிா் சுகாதார வளாகம் மாட்டுத் தொழுவமாக மாறியதால் பெண்கள் அவதிக்குள்ளாயினா்.

News image
வத்திராயிருப்பு அருகே கல்யாணிபுரத்தில் மாட்டுத் தொழுவமாக மாறிய மகளிா் சுகாதார வளாகம்.
Updated On :5 செப்டம்பர் 2024, 12:10 am

Din

வத்திராயிருப்பு அருகேயுள்ள கல்யாணிபுரத்தில் மகளிா் சுகாதார வளாகம் மாட்டுத் தொழுவமாக மாறியதால் பெண்கள் அவதிக்குள்ளாயினா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கல்யாணிபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மகளிா் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது, அங்கு கால்நடைகளை கட்டி வைப்பதால் கழிவுநீா் தேங்கி, கொசு உற்பத்தியாகும் சூழல் நிலவுகிறது. சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், கல்யாணிபுரத்தில் புதிய சுகாதார வளாகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய சுகாதார வளாகம் கட்ட ஊருக்கு வெளியே இடம் தோ்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கின.

ஊருக்கு வெளியே சுகாதார வளாகம் கட்டப்பட்டால், இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் பழைய சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.