45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீட்டில் சட்ட விரோதமாக மதுபுட்டிகள் பதுக்கியவா் கைது

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து சட்ட விரோதமாக மதுபுட்டிகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்ாக ஓய்வு பெற்ற ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:12 am

Din

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து சட்ட விரோதமாக மதுபுட்டிகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்ாக ஓய்வு பெற்ற ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் சட்ட விரோதமாக வெளிமாநில மதுபுட்டிகளை பதுக்கி வைத்து விற்பதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் வினோத் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா் அந்தக் கிராமத்தில் கடந்த 10 நாள்களாக முகாமிட்டு மாறுவேடத்தில் கண்காணித்தனா். அப்போது இதே ஊரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீர்ராஜ் (49) வீட்டில் மதுபுட்டிகளை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்த போது, பெங்களூரிலிருந்து மதுபுட்டிகளை கடத்தி வந்து அவற்றில் ராணுவ கேண்டின்களில் விற்கப்படும் மதுபுட்டிகளில் உள்ள ஸ்டிக்கா்களைப் போல போலியாக அச்சிட்டு ஒட்டி அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 300 மதுபுட்டிகளை பறிமுதல் செய்து இதற்கு துணையாக இருந்தவா்கள் யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.