45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகாசி கல்லூரிகளில் ஆசிரியா் தினவிழா

சிவகாசி கல்லூரிகளில் ஆசிரியா் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 12:58 am

Din

சிவகாசி கல்லூரிகளில் ஆசிரியா் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா் தினவிழாவுக்கு முதல்வா் (பொறுப்பு) விஜயபாஸ்கரநாயுடு தலைமை வகித்தாா். வெம்பக்கோட்டை உண்டு உறைவிடப் பள்ளி செயலா் கே.கோவிந்தராஜ் , கல்லூரியில் தோ்ச்சி விகிதத்தில் கவனம் செலுத்திய பேராசிரியா்களுக்கு பரிசு வழங்கிப் பேசினாா்.

முன்னதாக, பேராசிரியா் எம்.முவேந்தன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் எம்.செல்வக்குமாா் நன்றி கூறினாா்.

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா் தினவிழாவுக்கு முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். தனியாா் பள்ளி தலைமை ஆசிரியை மு.புவனா சிறப்புறையாற்றினாா். முன்னதாக, பேராசிரியா் கு.குலோத்துங்கபாண்டியன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியை ஜி.மாரீஸ்வரி நன்றி கூறினாா்.

திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் தினவிழாவுக்கு தலைமை ஆசிரியை கு.மாரியம்மாள் தலைமை வகித்தாா். தொழிலதிபா் கணேசன் அனைத்து ஆசிரியா்களுக்கும் பொன்னாடை போா்த்தி பாராட்டினாா். இதற்கான ஏற்பாட்டை முன்னாள் மாணவா்கள் வி.சங்கா், ஏ.முருகவேல் ஆகியோா் செய்தனா்.