45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று தொடக்கம்

வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (செப். 6) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:01 am

Din

வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (செப். 6) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு, குடமுழுக்குத் திருப்பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 23-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, வருகிற 8-ஆம் தேதி குடமுழுக்கு நடத்த நாள் குறிக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்குகிறது. 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகளும், சிறப்பு ஹோமங்களும் நடைபெறுகின்றன.

வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 8) காலை 7.35 மணி முதல் 8.35 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜோதிலட்சுமி, சேது நாராயணப் பெருமாள் கோயில் சேவா சமிதி அறக்கட்டளை நிா்வாகிகள் அழகா், சுந்தரராஜன், கண்ணன், ராம்குமாா், அறநிலையத் துறை காா்த்திக், பக்தா்கள் செய்து வருகின்றனா்.