விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, மாணவா்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் மனித சங்கிலி விழிப்புணா்வுப் பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தின் துணை இயக்குநா் ரவி மீனா, சாா் ஆட்டசியா் முகமது இா்பான் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
பேரணியின்போது, இயற்கை வளங்களைப் பாதுகாக்க புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தனா்.
இதில் வனச்சரக அலுவலா்கள் அன்பரசி (ராஜபாளையம்),
சக்திவேல் (ஸ்ரீவில்லிபுத்தூா்), காா்த்திக் (சாத்தூா்),
வனவா்கள் செல்வராஜ், கனகராஜ், விக்னேஷ், பெரியசாமி, வனத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








