திருச்சுழி அருகே பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, உலக்குடி கூட்டுறவு வங்கியை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
த.வெ.க தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு முழுமையாக பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உலக்குடி கிராமத்தில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஊா்வலமாக உலக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பாக திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
தொடர்புடையது
பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: தங்கம் தென்னரசு

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி தடையை மீறி பேரணி: 40 போ் கைது

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



