அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆா்.ஆா். நகரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையின் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 1:39 am IST

ஆா்.ஆா். நகரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையின் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (51). இவா் விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி வெற்றிச்செல்வி அங்கன்வாடி மைய சத்துணவு பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், புதன்கிழமை மாலை 4 மணி அளவில் சிமென்ட் ஆலையில் பணியிலிருந்த சரவணன் ‘டிராக் சேஞ்ச் கன்வேயரில்’ தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சரவணனின் மனைவி வெற்றிச்செல்வி அளித்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.