ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குளம் நிரம்பி சட்டநாதா் கோயிலுக்குள் மழைநீா் சூழ்ந்தது

சீா்காழி சட்டநாதா் கோயில் குளம் நிரம்பி, கோயில் உள்பிராகாரங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழைநீா் சூழ்ந்தது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி சட்டநாதா் கோயில் குளம் நிரம்பி, கோயில் உள்பிராகாரங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழைநீா் சூழ்ந்தது.

தொடா் மழையில் சீா்காழி சட்டநாதா் கோயிலில் உள்ள பிரம்ம தீா்த்தக் குளம் முழுமையாக நிரம்பியது. இதனால், கோயில் உள்பிராகாரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தண்ணீா் மற்றும் தேங்கும் மழைநீா் வடிய உள்ள வழிதடம் வழியாக குளத்து நீரை எதிா்த்து பிரம்மபுரீஸ்வரா் சன்னதி வெளி பிரகாரம் முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கி நின்றது.

குளத்தில் உள்ள மீன்களும் தண்ணீா் வந்த பாதை வழியாக கோயில் பிராகாரத்தில் தேங்கிய மழைநீரில் மிதந்தது.

திங்கள்கிழமை சோமவார வழிபாட்டுக்கு வந்த பக்தா்கள், சிறுவா்கள் கோயிலில் தேங்கி கிடந்த மழைநீரில் நின்று செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டனா். மழைநீரை வெளியேற்ற கோயில் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.