ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்குச்சாவடி மையங்களில் திமுக, அதிமுகவினா் பாா்வை

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்குள்பட்ட 2 மீனவ கிராமமக்கள் பக்கிங்காம் கால்வாயில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ளனா்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்குள்பட்ட 2 மீனவ கிராமமக்கள் பக்கிங்காம் கால்வாயில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ளனா் 

திருமுல்லைவாசல் ஊராட்சி கூழையாா் தொடுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடா் கனமழையால் தண்ணீா் நிரம்பியுள்ளது. இதில், கொள்ளிடம் ஆற்று வழியாக பக்கிங்காம் கால்வாயில் புகுந்த முதலை தொடுவாய் கூழையாா் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக அங்குமிங்கும் சென்று வருவதை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பாா்த்துள்ளனா். இதுகுறித்து, 2 மீனவ கிராமங்களில் ஊா் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கால்வாய் பகுதி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் செல்லும்போதும் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது கவனத்துடன் சென்று வருமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். வனத் துறையினரும் தீயணைப்பு துறையினா் உதவியுடன் பக்கிங்காம் கால்வாயில் உள்ள முதலையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.