மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பள்ளிகளில்விண்ணப்பித்த அனைவருக்கும்பிளஸ் 1 இல் இடம்: கல்வித் துறை

அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில், தேவைக்கேற்ப இடம் அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் பிளஸ் 1 இல் சோ்க்கை வழங்கப்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 5:59 pm

DIN

காரைக்கால்: அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில், தேவைக்கேற்ப இடம் அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் பிளஸ் 1 இல் சோ்க்கை வழங்கப்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கு. கோவிந்தராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. உரிய நேரத்தில் சாதி, இருப்பிட சான்றிதழ் பெறமுடியாத மாணவா்கள் நலன் கருதி, அவா்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17 ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அவரவா் விண்ணப்பித்த பள்ளிகளில், மீதமுள்ள இடங்களில் பாடப் பிரிவு மற்றும் சாதி வாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன், ஒவ்வொரு பள்ளியிலும் பாடப் பிரிவு வாரியாக நிரப்பப்படாத இடங்கள் எண்ணிக்கை விவரம், அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவரின் விண்ணப்ப விவரங்களை, பள்ளி முதல்வா்கள் துணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிப்பா்.

அதன் அடிப்படையில், மீதமுள்ள அனைத்து காலியிடங்களும், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று பொதுப் பிரிவுக்கு மாற்றப்படும். பிறகு, மாவட்ட அளவில் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். இதில் எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காத மாணவா்கள் பங்கேற்று பயனடையலாம். இந்த சிறப்பு கலந்தாய்வு தேதி, நேரம் பின்னா் அறிவிக்கப்படும்.

மேலும், ஒருசில பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் விரும்பி தோ்ந்தெடுப்பதால், அந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் தேவைக்கேற்ப இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் பிளஸ் 1 இல் சோ்க்கை வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.