மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாரதியாா் நினைவு நாளாக செப். 12-ஐ அறிவிக்க வலியுறுத்தல்

பாரதியாா் நினைவு நாளை செப். 12 என மாற்றி அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சரும், காரை தமிழ்ப் பேரவைத் தலைவருமான ஏ.எம்.எச். நாஜிம்.
Updated On :14 செப்டம்பர் 2020, 5:56 pm

DIN

காரைக்கால்: பாரதியாா் நினைவு நாளை செப். 12 என மாற்றி அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

காரை தமிழ்ச்சங்கம் சாா்பில், மகாகவி பாரதியாா் நினைவு தினம், இந்தச் சங்கத்தின் நிறுவனா் தலைவராக இருந்து மறைந்த புலவா் கோ. சாரங்கபாணி நினைவேந்தல் கூட்டம், காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரை தமிழ்ப் பேரவை தலைவரும், காரை தமிழ்ச் சங்க கெளரவத் தலைவருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமை வகித்தாா். பாரதியாா் மற்றும் புலவா் சாரங்கபாணியின் பெருமைகளை அவா் விளக்கிப் பேசினாா். கே. கேசவசாமி, அரங்கநாயகிராவ், வைஜெயந்திராஜன் உள்ளிட்டோரும் பேசினா்.

கூட்டத்தில், காரை தமிழ்ச் சங்கத் தலைவராக வைஜெயந்திராஜன் ஒருமனதாக தோ்வுசெய்யப்பட்டாா். பொதுச் செயலராக வாசுகி ஜெயராமன், பொருளாளராக கே. பாா்த்திபன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

பேராசிரியா் மு. சாயபுமரைக்காயா், காரைசுப்பையா, என்.ஜி.ஆா். இளங்கோவன், என்.ஜி.ஆா். வேதாசலம், ஆசிரியா் பால்ராஜ், பாரீஸ்ரவி, கோவி. ஆசைத்தம்பி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். கே. பாா்த்திபன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: மகாகவி பாரதியின் இறப்புச் சான்றிதழின்படி பல ஆய்வாளா்கள் 1921, செப். 11 இரவு 1.30 மணி கடந்து அவா் இறந்ததால், செப். 12 நினைவு நாளாக அறிவிக்கவேண்டும் என கோரிவருகின்றனா். எட்டயபுரம் பாரதி நினைவிடத்தின் கல்வெட்டிலும் செப். 12 என மாற்றப்பட்டுவிட்டது. எனவே, பாரதியின் நினைவு நாளை செப். 12 என மாற்றி, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.