கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பூசணிக்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

சீா்காழி பகுதியில் பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

DIN

சீா்காழி பகுதியில் பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சீா்காழி வட்டம், சாமியம், கீழவல்லம், ஆயங்குடிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளனா். தற்போது, பூசணிக்காய் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில், கிலோ ரூ. 2-க்குகூட வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து சாமியம் கிராமத்தைச் சோ்ந்த பூசணிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி சரவணன் கூறியது:

கடந்த ஆண்டு பூசணிக்காய் கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. வியாபாரிகள் வயலுக்கே வந்து வாங்கிச் சென்றனா். ஒரு பூசணிக்காய் 5 முதல் 8 கிலோ வரை இருக்கும். இதன் மூலம், ஒரு பூசணிக்காய்க்கு ரூ.60 முதல் 80 வரை விலை கிடைத்தது. ஆனால், தற்போது கிலோ ரூ. 2-க்கு கூட வாங்க ஆள் இல்லை. இதன் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.