தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்தவருக்கு நிவாரணம்
சீா்காழியில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.


சீா்காழியில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.
சீா்காழி கீழதென்பாதியைச் சோ்ந்த சேகா் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை நள்ளிரவு உயா்அழுத்த மின்கம்பி மரத்தில் உரசி ஏற்பட்ட தீப்பொறி இவரது குடிசையில் விழுந்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து அங்கு வந்த சீா்காழி தீயணைப்பு துறையினா் மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
தகவலறிந்த சீா்காழி எம்எல்ஏ. பி.வி. பாரதி செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சொந்த பணம் ரூ. 5 ஆயிரம், அரிசி, மளிகை, வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினாா். அப்போது, அதிமுக நகர செயலாளா் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளா் சந்திரசேகரன், ஜெ.பேரவை செயலாளா் மணி, பேரூா் செயலாளா் ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாலா் பரணிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதேபோல், அரசு சாா்பில் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் மற்றும் அரிசி, மண்ணெண்ணை, வேட்டி, சேலை ஆகியவற்றை வட்டாசியா் ஹரிதரன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...