மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் சிபிஐ நிா்வாகி நீதி சோழன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சாலையில் தரமற்ற அரிசியை கொட்டி நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை தரமான முறையில் வழங்கவேண்டும் , உணவு பொருள்களின் எடையை குறைக்க கூடாது, மாதந்தோறும் பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவாசன், ஒன்றிய செயலாளா் செல்லப்பன், நிா்வாகிகள் தேவகி, ராமச்சந்திரன், வாசுகி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரி மனு கொடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.