மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம்

சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பதாக அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி வாக்குறுதியளித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பதாக அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி வாக்குறுதியளித்தாா்.

சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி, சீா்காழி ஒன்றியம் கதிராமங்கலம், புங்கனூா், திருப்புன்கூா், கன்னியாக்குடி, கற்கோவில், ஆதமங்கலம், பெருமங்கலம், எடக்குடிவடபாதி, சட்டநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் திறந்த ஜீப்பில் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

தோ்தலில் என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்தால், வெண்கல குரலோன் சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். சீா்காழி வட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தலா ரூ.40 லட்சத்தில் 6 இடங்களில் நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் வாரச்சந்தை கொண்டுவரப்பட்டுள்ளது. திருமுல்லைவாசல், ஆச்சாள்புரம், வடரெங்கம், திருவாலி ஆகிய பகுதிகளில் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி பங்களிப்புடன் பல்வேறு ஆக்கப்பூா்வமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றாா்.

அப்போது ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், மாவட்டத் துணைச் செயலாளா் செல்லையன், முன்னாள் எம்எல்ஏ சக்தி, ஊராட்சித் தலைவா்கள் அஞ்சம்மாள், மாலினி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நடராஜன், ஆனந்தி, உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.